Friday 19 January 2018

02, ஹூனான் விவசாயின் இயக்கம் பற்றி ஓர் அறிக்கை (மா சே துங்) - கே.என்.சிவராமன்

(சிவந்த மண்- மார்க்சிய கோட்பாடுகளுடன் ரஷ்ய – சீன புரட்சியின் வரலாறு- என்ற நூலில் இருந்து)

“விவசாய சங்கம் குற்றம் இழைத்துவிட்டதாக கூறுபவர்களிடம் மாவோ சொல்கிறார். உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக் குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிரான உழைக்கும் மக்க ளின் போர் இது எவ்விதத்திலும் இது குறைகூறத்தக்கதல்ல. என்று. தான் பயணம் செய்த போது விவசாய சங்கத்தின் சாதனைகளை பட்டியலிடுகிறார்.

மாபெரும் 14 சாதனைகளை கூறும் மாவோ இப்புரட்சி சரியான திசை வழியில் செல்வதை தெளிவாக அறிகிறார். மக்களை அமைப் பாக்கியதே மாபெரும் சாதனை ஹுனான் மத்திய மாவட்டத்தில் எல்லா விவசாயிகளும், தெற்கு ஹுனானில் பாதி விவசாயிகளும், மேற்கு ஹுனானில் இப்போது அமைப்பாக்கும் நிலையிலும் சங்கத் தில் இணைந்திருக்கின்றனர்.

ஆனால், சில மாவட்டங்களை அமைப்பு இன்னும் சேரவில்லை. நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினைத் தாக்கும் விவசாய சங்கம் தன் பலத்துக்கேற்றவாறு செயல்பாட்டில் இறங்குகிறது. அரசியல்ரீதியாக தாக்க கணக்குகளை சரிபார்ப்பது

அதாவது, பொதுப்பணத்தினை கையாடல் செய்த தீய மேட்டுக் குடிக்கு எதிரானநடவடிக்கை - பணத்தினை மீட்பதோடு அந்தஸ்தினை அடித்து வீழ்த்தவும் பயன்படுகிறது. ஒழுங்கினங்களுக்கு எதிராக நன்கொடை வசூலிக்கப் படுகிறது. அத்துடன் அவன் தன் மானம் மரியாதையை முற்றிலும் இழக்கவும் வைக்கிறது சங்கம். நன்கொடைகள் மூலம் தண்டனை வழங்கப்படுகிறது.

உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப்பிரபுக்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் முக்கியமானவை. சியாங்டனில் 15 ஆயிரம் விவசாயிகள் தியமேட்டுக்குடியினரின் வீட்டில் நுழைந்துதுவம்சம் செய்து 4நாட்கள் தங்கி தின்று தீர்க்கின்றனர். பின்னர் வழக்கமான அபராதம் வேறு. உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக்குடியினர்,அராஜகநிலப் பிரபுக்கள் ஆகியோரை தெருவில் காகிதத்தொப்பி அணிந்து இழுத்து வரும் இந்நிகழ்வு மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

முன்னர் நிலப்பிரபுவின் ஆணைக்கிணங்க சிறையில் தள்ளிய நீதிபதி - இப்போது விவசாய சங்கம் காலையில் சொன்னால் மதியம் பிடி ஆணை பிறப்பிக்கப்படுகிறார். மிக மோசமான குற்றங்கள் புரிந்த உள்ளூர் கொடுங்கோலர் தீய மேட்டுக்குடியினர், அராஜக நிலப் பிரபுக்கள் தன் வசதிக்கேற்றவாறு தப்பி ஓடுகின்றனர்.

சிலர் அரசால் திருப்பி கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மிக மிக மோசமான கொடுங்கோலர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான குறிப்புக்களும் அவன் இழைத்த குற்றங்களும் என அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான விவசாயிகளை வறுமையால் கொன்றவன், பிச்சைக்காரர்களை கொன்று ஆரம்பிக்கிறேன்" என சொன்ன வன் என முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கிறது. ஹனான் மாகாணத்தில் விவசாய சங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள பகுதிகளில் எல்லாம் எங்குமே தானிய பதுக்கலோ, வெளியே அனுப்புவதோ, விலையேற்றம் செய்வதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. குத்தகையை காரணமின்றி அடிக்கடி உயர்த்திகொள்ளை அடித்தல் தடைசெய்யப்பட்டிருக்கிறது.

டு எனப்படும் மாவட்டமும் டுவான் எனப்படும் மாவட்டநிர்வாகமும் இப்போது அமைதியாய் ஒதுங்கியிருப்பதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

மக்களை சித்திரவதை செய்யும் போலீசு இப்போது ஒதுங் கிச் செல்கிறது. நிலப்பிரபுக்களின் ஆயுதப்படையை தூக்கியெ றிந்து விவசாயிகள் தங்களின் படைகளை நிறுவியிருக்கிறார்கள் சியாங் சியாங்கில் ஒரு லட்சம் ஈட்டிகளும், மற்ற மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஈட்டிகளும் இருக்கின்றன.

ஈட்டியை கண்டு உள்ளூர் கொடுங்கோலர், தீய மேட்டுக் குடியினர், அராஜக நிலப் பிரபுக்கள் தான் பயம்கொள்ள வேண்டும். புரட்சியாளர்கள் அல்ல.
சீனாவில் மதிக்கும் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் ஆதிக்கம்(மாகாண அமைப்புமுறை,குல ஆதிக்கம், கடவுளாதிக்கம் என 3 வகையான ஆதிக்கத்தின் கீழ்தானிருக்கின்றனர். ஆனால், பெண்கள் இந்த மூன்றையும் சேர்த்து கணவன் ஆதிக்கத்திலும் உழல்கின்றனர்.

நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான இப்போராட்டம் நால்வகை ஆதிக்கத்தையும் தகர்க்கிறது. பெண்களுக்கு சம உரிமை என சுதந்தி ரம், ஜனநாயகம், சமத்துவம் என அனைத்தும் பரவலாக்கப்படுகிறது. இந்தப்புரட்சி மாபெரும் கல்வி அறிவினை மக்களுக்கு கொடுத் திருக்கிறது. அன்னியப்பாணி கல்வியினை வெறுத்த மக்கள் சீனப் பாணிகல்விமுறையை ஆவலோடுகற்கிறார்கள். அரசியல் கல்வியில் இரு குழந்தைகள் விளையாடும் போது கூட ஏகாதிபத்தியம் ஒழிக’ என முழக்கமிடுவதன் மூலம் மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள அரசியலை அறியமுடிகிறது, தீய பழக்கங்களான சூதாட்டம், ஆபாச நடனம், அபின் புகைத்தல், சாராயம் காய்ச்சுதல் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டது. எருதுகள் கொல்வதற்குதடையும்,கோழிகள், வாத்துகள், பன்றிகள், வளர்க்க கடும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக் கிறது. கொள்ளையடித்தல் ஒழிக்கப்பட்டு, கொள்ளையர்கள் விரட்டி யடிக்கப்பட்டுள்ளனர். மேலும் மிக அதிகமான நன்கொடைகூட தடை செய்யப்பட்டிருப்பது என்பது பணக்கார விவசாயிகள் மத்தியில் கூட நல்ல பெயரை கொடுத்திருக்கிறது. கடனுக்காக கூட்டுறவு இயக்கம், தானியத்துக்கான கூட்டுறவு என பலவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லாண்டுகளாக போடப்படாத சாலை, துர்வாரப்படாத குளங்கள் என அனைத்தும் நான்கு மாதங்களில் சீர்செய்யப்பட்டுள்ளன... என்றெல்லாம்பட்டியலிட்டு இதுமக்களின் போராட்டமே.உழைக் கும் விவசாயிகளின் புரட்சியே என ஆணித்தரமாக நிறுவுகிறார் தோழர் மாசேதுங். இதை ஆதரிக்க வேண்டியது நம் கடமை என்றும் அப்போதிருந்த வலது தலைமை புரட்சியை புறக்கணித்தது தவறு என்பதையும் தெளிவிக்கிறார்.

புத்தகம் முடிந்தவுடன் அவரது வார்த்தைகள் ஆழமாகப் பதிகின்றன.

ஒரு புரட்சி என்பது மாலைநேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ ஒவியம் தீட்டுவதோ, பூதையல் வேலைப்பாடோ அல்ல. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந் தன்மையுள்ளதாகவும் இருக்கமுடியாது. புரட்சி என்பது ஒருவர்க்கம் இன்னொருவர்க்கத்தினை தூக்கியெறிவதாகும். இது ஒருபலாத்கார நடவடிக்கை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்திருக்கும் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தை வீழ்த்த, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பலத்தை பயன்படுத்தாமல் சாத்தியமில்லை.

உயிர்ப்புமிக்க எழுச்சிமட்டுமே லட்சக்கணக்கான விவசாயிகளை தட்டி எழுப்பி பலம் வாய்ந்த சக்தியாக உருவாக்கும்!”

No comments:

Post a Comment