Monday 28 January 2019

பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி (துரோகி) காவுத்ஸ்கியும் - நூல் அறிமுகம்


காவுத்ஸ்கி 1918ஆம் ஆண்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒரு சிறு வெளியீட்டை கொண்டு வந்தார்.

காவுத்ஸ்கி, தம்நூலில் சோஷலிசப் புரட்சி பற்றியும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகரத்தைப் பற்றியும் மார்க்சிய அடிப்படைகளுக்கு எதிராக திரித்து எழுதியுள்ளார். ஜனநாயகம் என்பதை வர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட தூயதாக காட்ட முயற்சித்தார். சோவியத் ஆட்சியை பழித்துரைத்தார், போல்ஷிவிக் கட்சியின் செயற்பாட்டைக் கறைபடுத்தினார். இதற்கெல்லாம் பதிலளிக்கும் படியாக, பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும் என்ற நூலை லெனின் 1918ஆம் ஆண்டில் எழுதினார். இரண்டாம் அகிலத்தின் திவாலான நிலைமை முழுவதும் வெளிபட்டுவிட்டதாக இந்நூலில் லெனின் எழுதியுள்ளார்.

ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் என்ற வேறுபாட்டின் அடிப்படையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை காவுத்ஸ்கி விளக்குகிறார். சர்வாதிகாரம் என்பதை சொல்லின் இலக்கணத்தைக் கொண்டு விளக்க முனைகிறார். பொதுவான ஜனநாயகம் பற்றி பேசுவது மிதவாதிகளுக்கு இயல்பானதே, ஆனால் அவர் மார்க்சியத்தின் பேரால் விளக்குகிறார்.

“மார்க்சிய போலி பண்டிதரான காவுத்ஸ்கி மார்க்சியத்தை இவ்வாறு கோராமாகத் திரித்துப் புரட்டுவதை எவ்வாறு விளக்குவது?

இந்தப் புலப்பாட்டினுடைய தத்துவத்தின் வேர்களைப் பொருத்தவரை இயக்கவிலுக்குப் பதில் இவற்றில் கதம்பவாதமும் குதர்க்கவாதமும் பதிலீடு செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். இந்த வகையான பதிலீடு செய்வதில் காவுத்ஸ்கி கைகண்ட வல்லுனராவார்.  நடைமுறை அரசியலின் கருத்து நோக்கிலிருந்து பார்த்தால் இது சந்தர்ப்பவாதிகளுக்கு அடிபணிவதாகும், அதாவது கடைசியாக ஆய்வு செய்து பார்த்தால் முதலாளித்துவ வர்க்கத்துக்கு அடிபணிவதாகும். இந்தப் போர் வெடித்தது முதல் காவுத்ஸ்கி சொல்லில் மார்க்சியவாதி, செயலில் முதலாளித்துவ வர்க்கத்தின் அடித் தொண்டராக இருக்கும் கலையில் மிகவும் அதிக விரைவான முன்னேற்றம் கண்டுள்ளார், இதில் அவர் ஒரு விற்பன்னர் ஆகிவிட்டார்.”1

மேலும் அவர் சர்வாதிகாரம் என்பதை ஒரு தனிநபர் வழியில் தவறான பொருள் கொண்டுள்ளார். அதனால் தான் சர்வாதிகாரம் என்றவுடன் அவருக்கு கொடுங்கோலனே நினைவுக்கு வருகிறார். கொடுங்கோன்மை பற்றி விவரித்துவிட்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய இலக்கணத்தை தட்டிக் கழிக்கின்ற முட்டாள் தனமான மற்றும் மோசடியையும் செய்கிறார்.

தனிநவர் சர்வாதிகாரத்துக்கும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை லெனின் தெளிவுபடுத்துகிறார்.

“சர்வாதிகாரம் என்பது, நேரடியாக பலப்பிரயோகத்தை அடிப்படையாக்கிய, எந்தச் சட்டத்தாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது, முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி வெற்றிபெற்று கட்டிக் காத்துவரும் ஆட்சியாகும். எந்தச் சட்டங்களாலும் கட்டுப்படுத்தப்படாத ஆட்சியாகும்.”2

பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்பது முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திய பின்பு பாட்டாளி வர்க்கம் தமக்கான அரசை அமைத்துக் கொண்டு முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக செயற்படுத்தும் சர்வாதிகாரமாகும். இந்த சர்வாதிகாரம் என்பது புரட்சிகர மக்களின் அரசை எதிர்க்கின்ற முதலாளித்துவ போக்குகளை பலப்பிரயோகத்தால் ஒடுக்கும் அதிகாரமாகும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பற்றி லெனின் வேறொரு நூலில் கூறுகிறார்:-
“சோவியத் ஆட்சியதிகாரமானது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின், முன்னேறிய வர்க்கத்தினுடைய சர்வாதிகாரத்தின் ஓர் ஒழுங்கமைப்பு வடிவமே அன்றி வேறல்ல, உழைப்போரும் சுரண்டப்படுவோருமான கோடானு கோடியான மக்களை, பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாடு வாய்ந்த, வர்க்க உணர்வு கொண்ட முன்னணிப் படையினைத் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாய் உறுதியாய் நம்பத்தக்க தமது தலைவனாகக் கருதக் கற்றறிந்து கொள்ளும் அம்மக்களை, ஒரு புதிய ஜனநாயகத்துக்கு, அரசின் நிர்வாகத்தில் சுயேச்சையான பங்கு கொள்ளும் நிலைக்கு உயரச் செய்யும் முன்னேறிய வர்க்கத்தினுடைய சர்வாதிகாரத்தின் ஒரு வடிவமே அன்றி வேறல்ல.”3

மார்க்ஸ், எங்கெல்ஸ் வழிகாட்டிய இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மார்க்சிய அணுகுமுறையை காவுத்ஸ்கி ஏற்றுக் கொள்ளாததால் தடுமாற்றத்தோடு முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிறார்.

“காவுத்ஸ்கி மார்க்சியத்தில் இருந்து மிதவாதிகளுக்கு, முதலாளிகளுக்கு ஏற்புடையவற்றை (மத்திய கால நிலை பற்றிய விமர்சனம், பொதுவாக முதலாளித்துவத்தின், குறிப்பாக முதலாளித்துவ ஜனநாயகத்தின் முற்போக்கான வரலாற்றுப் பாத்திரம்) எடுத்துக் கொள்கிறார். மார்க்சியத்தில் முதலாளிகளுக்கு ஏற்புடையதல்லாதவற்றை (முதலாளித்துவ வர்க்கத்தின் அழிவுக்காக அதனை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர பலாத்காரம்) அவர் நிராகரிக்கிறார், அவை குறித்து எதுவும் சொல்லாது, மௌனமாகிறார், பூசி மெழுகுகிறார். இதனால் தான் காவுத்ஸ்கி, அவரது அகநிலை பண்புகள் எதுவாக இருந்த போதிலும் தமது புறநிலை காரணமாக தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிறார்.”4

சோவியத் பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் முகமாக லெனின் உரக்கக் கூறுகிறார்.

“பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தையும் விட மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகமானது, சோவியத் ஆட்சி அதிகாரம் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசை விடவும் மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகமானது.”5

காவுத்ஸ்கியினுடைய சருக்கலுக்குக் காரணம் வர்க்க பார்வையை இழந்ததேயாகும். தத்துவத்தில் சார்புத் தன்மையை ஏற்காமல் தூய ஜனநாயகம் பேசி பாட்டாளி வர்க்க கோட்பாட்டைவிட்டு ஓடி முதலாளித்துவ வர்க்கத்தின் அடிவருடியாகிவிட்டார்.

மார்க்சியத்தை திரிக்கின்ற, கொச்சைப்படுத்துகின்ற முயற்சிகளை விமர்சன வாயிலாக லெனின் முறியடித்தார். பல்வேறு நாடுகளில் புதியதாகத் தோன்றிய இளம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு போல்ஷிவிக்குகளின் புரட்சிகர அனுபவத்தை அளிக்கும்படியாக ஒரு நூலை எழுதினார்.
**********************************************
1.பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும் - தேர்வு நூல்கள் தொகுதி 9 – பக்கம்- 15
2. மேற்கண்ட நூல் – பக்கம்- 19
3.சோவியத் அரசாங்கத்தின் உடடினப் பணிகள் - தேர்வு நூல்கள் 8 பக்கம்- 94
4.பாட்டாளி வர்க்கப் புரட்சியும் கொள்கைமாறி காவுத்ஸ்கியும் - தேர்வு நூல்கள் தொகுதி 9 – பக்கம்- 29-30
5. மேற்கண்ட நூல் – பக்கம்- 29-30



Thursday 17 January 2019

மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் - எல்.லியான்டியாவ்


- எல்.லியான்டியாவ்
தமிழில்: தா.பாண்டியன்

விலை- ரூ.105/-

வெளியீடு:
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை- 6000 098.

044-26251968 – 26258410 – 2541288

“மார்க்ஸிய அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள் என்ற இந்நூல் 1967ல் தோழர் தா.பாண்டியன் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு என்சிபிஎச்-ஆல் வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் எல்.லியான்டியாவ் என்ற சோவியத் பொருளாதார அறிஞரால் எழுதப்பட்டது.

1)அரசியல் பொருளாதாரத்தின் பொருளடக்கம், 2)முதலாளிததுவத்தின் ஏகபோகக் கட்டம் ஏகாதிபத்தியம், 3)சோஷலிசத்தின் பொருளாதார அமைப்பு, 4)சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு என்ற தலைப்புகளில் கேள்வி-பதில் வடிவில் பொருளாதாரத்தை எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. அரசியல் பொருளாதாரத்தை படிக்க வேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள் இந்நூலைப் படித்து தமது பொருளாதாரம் பற்றிய தெளிவைப் பெறலாம்.



18) நெருக்கடிகளினால் ஏற்படும் தீமை என்ன?

(முதல் அத்தியாயத்தின் சில பகுதிகள் மட்டுமே இங்கே பதியப்பட்டுள்ளது. மொத்தம் நான்கு அத்தியாம் உள்ளது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., நிறுவனத்தில் நூலினை வாங்கி முழுமையாகப் படிக்கவும்)